Header Ads



இலங்கையில் நடந்துள்ள, குண்டுவெடிப்புக்கள் பயங்கரமானவை - பிரிட்டன் பிரதமர்

இலங்கையில் நடந்த குண்டி வெடிப்பு சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோதி கடும் கண்டனம் தெரிவிப்பதாக ட்வீட் செய்துள்ளார். இலங்கை மக்களோடு இந்தியா துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"நமது பிராந்தியத்தில் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்திற்கு இடமில்லை. குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்" என்று நரேந்திர மோதி மேலும் தெரிவித்துள்ளார்.

"இலங்கையிலுள்ள உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் உண்மையிலேயே பயங்கரமானவை. இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்து கொள்கிறேன்" என்று பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.