முஸ்லிம் கடைகளைப் பகிஷ்கரிக்கக் கோருவதில் உள்நோக்கமுள்ளது - கல்கந்தே தம்மானந்த தேரர்
உற்சவ காலங்களில் முஸ்லிம் கடைகளைப் பகிஷ்கரிக்கக் கோருவதில் உள்நோக்கமுள்ளது. இதேநிலைமை தேர்தல் காலங்களிலும் ஏற்படலாம் என களனி பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கல்கந்தே தம்மானந்த தேரர் தெரிவித்தார்.
களனிபல்கலைக்கழக இஸ்லாமிய மாணவர் அமைப்பின் USWA சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு கடந்த செவ்வாயன்று அமைப்பின் தலைவர் ருக்ஸான் நிஸார் தலைமையில் பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு பேசுகையிலே இதனைத்தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது, பொருட்கள் கூடுதலாக விற்கப்படும் காலங்களிலே இவ்வாறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஒரு நாட்டில் ஒரு சமூகம் ஆயிரம் வருடங்களுக்கு மேல் வாழ்ந்தால் அவர்கள் விருந்தாளிகளாக கருதமுடியாது. அவர்கள் நாட்டு பிரஜைகளே அவர்களை மேலும் வெளிநாட்டவர்களாக கருத முடியாது. ஒரு நாட்டில் நல்லிணக்கத்தை அரசோ வெளிநாட்டு தூதுவராலயங்களோ ஏற்படுத்த முடியாது மக்களாகிய நாமே ஏற்படுத்த வேண்டும் என்றார்.
Post a Comment