வனாத்தவில்லுவில் வெடிபொருட்கள் பற்றி, தகவல் வழங்கியவரை காணவில்லையாம்...!
புத்தளம்- வனாத்தவில்லு, லெக்டோவத்த பிரதேசத்தில் அண்மையில் கைப்பற்றப்பட்ட பாரியத் தொகை வெடிப்பொருட்கள் தொடர்பில் தகவல் வழங்கிய நபர் தொடர்பில், இப்போது எவ்வித தகவல்களும் இல்லாமல் போயுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மாவனெல்ல பிரதேசத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே, வனாத்தவில்லு பகுதியிலிருந்து வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment