சுவிட்சர்லாந்து வாழ் இலங்கை முஸ்லிம்கள், கடும் கண்டனம் தெரிவிப்பு
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு, சுவிட்சர்லாந்து வாழ் இலங்கை முஸ்லிம்கள், தமது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையமும், மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசல் நிர்வாகமும் இணைந்து அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளன.
அறிக்கை வடிவில் அமைந்த இந்தக் கடிதங்கள் இலங்கை ஜனாதிபதி, பிரதமர் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment