Header Ads



கல்முனையில் மழைவேண்டித் தொழுகை


நாட்டில் தற்போது நிலவுகின்ற அதிக வரட்சி காரணமாக கல்முனை அல் ஹாமியா அரபு கல்லூரியின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில்  மழைவேண்டித்தொழுகை இன்று (15 ) காலை 7.30 மணியளவில் கல்லூரியின் வளாகத்தில்  இடம்பெற்றது.

 கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க்  ஏ சீ தஸ்தீக் ( ஹாமி மதனி) அவர்களினால் தொழுகையும் அதனைத் தொடர்ந்து குத்பா பிரசங்கமும் துஆ பிரார்த்தனையும் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.

இதில் கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

(எம்.என்.எம்.அப்ராஸ்)



No comments

Powered by Blogger.