நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதலுக்கு பழிவாங்கவே, இலங்கையில் குண்டுத்தாக்குதல் - பாராளுமன்றில் தெரிவிப்பு
நியூசிலாந்தில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் உள்ளூர் அடிப்படைவாதிகள் இலங்கையில் தாக்குதல்களை நடத்தியிருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் அறியவந்திருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இன்று -23- பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
பிரதமர் மற்றும் எனக்கு அல்லது அமைச்சரவைக்கு பாதுகாப்பு தொடர்பில் எந்த முன்னறிவித்தல்களும் வழங்கப்படவில்லை.தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு நானோ பிரதமரோ அழைக்கப்படவில்லை.இப்படியான அடிப்படைவாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டு அவற்றின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும்.முன்னதாக வந்த எச்சரிக்கைகள் ஒரு சிலர் மத்தியில் மாத்திரமே பரிமாறப்பட்டுள்ளது
நாட்டில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் இருக்கலாம் ஆனால் ஒரு பாதுகாப்பு அதிகாரியாய் இருந்து கொண்டு பொறுப்பில்லாமல் ஒரு நகைச்சுவை கதைசொல்வது நல்லதல்ல இன்று மஹிந்த இராஜபக்ஷ் பாராலுமன்றத்தில் கூறியுள்ள முக்கிய பாதுகாப்பு செய்திகளை பற்றியது கவனித்தீரா?
ReplyDeleteநீங்களும் உங்கள் அரசாங்கமும் பெட்டியை கட்ட தயாராகுங்கள்