இன்று அழிக்கப்பட்டது, கோதுமை மாவா...?
கைப்பற்றப்படும் தோதைப்பொருட்கள் ஒருபோதும் மீண்டும் மக்கள் மத்திக்கு வராது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, அதனை அழிப்பதற்கு ஜனாதிபதி தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பாராளுமன்றில் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
நாட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பாரியதொருதொகை கொக்கெய்ன் போதைப்பொருள் இன்று ஜனாதிபதி தலைமையில் அழிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இடத்துக்கு நானும் சென்றிருந்தேன். என்றாலும் அந்த இடத்துக்கு நான் செல்வதற்கு முன்னர், இந்த போதைப்பொருள் அழிப்பு தொடர்பாக பேஸ்புக் பக்கங்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக போதைப்பொருள் அழிப்பதாக தெரிவித்து கோதுமை மாவே அங்கு அழிக்கப்படுவதாக அதிகமானவர்கள் குறிப்பிட்டிருந்தனர். என்றாலும் இன்று கொக்கைன் அழிக்கப்படும்போது அந்த இடத்தில் நானும் இருந்தேன். நீதிபதிகளும் இருந்தனர்.அங்கு அழிக்கப்பட்டது கொக்கைன்தான் என்பதை எனக்கு பொறுப்புடன் தெரிவிக்க முடியும் என்றார்.
Post a Comment