Header Ads



தவ்ஹீத் ஜமாத்தை, தடை செய்யுங்கள் - தயாசிறி கோரிக்கை

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை போல, தவ்ஹீத் ஜமா ஆத் அமைப்பையும் தடைசெய்ய வேண்டுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த  அவர்,

நாட்டில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு, தவ்ஹீத் ஜமா ஆத் அமைப்​பே காரணம். ஆகவே இந்த அமைப்பை தடை செய்ய வேண்டுமென,  ஜனாதிபதிக்கு சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுக்கும் என்றார்.

"உயிர்த்த ஞாயிறன்று தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும், புலனாய்வு தகவல்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை. தீவிரவாதத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி அறிந்திருக்கவும் இல்லை." எனவும் தெரிவித்தார்.

2 comments:

  1. குற்றவாளிளைகைதுசெய்ய வக்கற்ற கூட்டம் இருதியில் தப்பித்துக் ொள்ள இருதியில் ௌஹீத் ஜமாஅதை சாடுகிரது

    ReplyDelete
  2. Please do it as soon as possible, All Sri Lankan Muslim are begging for it, all type Thowheed Jamath and wings of them should be banned from Sri Lanka immediately.

    ReplyDelete

Powered by Blogger.