முஸ்லிம் இளைஞர்கள் மீது, ஏனைய மதத்தினருக்கு பொறாமை ஏற்படுகிறது - பேராசிரியர் தயா அமரசேகர
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஏற்பாடு செய்திருந்த சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை வெளியிட்டு வைக்கப்பட்டது. இதில் பேராதனைப் பல்கலைக்கழக சமூகவியல் பீட பேராசிரியர் தயா அமரசேகர உரையாற்றுகையில்,
இது முக்கியதொரு பயனுள்ள நிகழ்வாகும். உலமா சபையின் சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை வெளியீடு இன்றல்ல இற்றைக்குப் பலவருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருக்க வேண்டும். மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வெளியிடப்பட்டிருந்தால் தேசிய ஒருமைப்பாடும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் மேலும் வலுப்பெற்றிருக்கும்.
1970, 1980 களில் சாதி, சமய வேறுபாடுகள் காரணமாக நாட்டில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றன. பௌத்த மக்களிடமிருக்கும் தவறான கருத்துகளை இல்லாமற் செய்வதற்கு சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை பெரிதும் உறுதுணையாக இருக்கும். நாம் இனம், மதம் என்ற வகையில் வேறு கலாசாரங்களையும் கொள்கைகளையும் கொண்டிருந்தாலும் அனைவரும் மனிதர்கள் என்ற வகையிலும் ஒரே தேசத்தவர் என்ற வகையிலும் ஒன்றுபட வேண்டும்.
இச்சந்தர்ப்பத்தில் எனது கல்லூரி வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நான் பயின்ற போது முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அங்கு பயின்றார். அவர் கல்லூரியில் அனைவரதும் அன்பினைப் பெற்றிருந்தார். அனைவருடனும் சகோதர பாசத்துடன் பழகினார். கல்லூரியில் மாணவ தலைவராகவும் நியமனம் பெற்றார். அன்று எங்களை மொழியோ, சமயமோ, இனமோ வேறுபடுத்தவில்லை. அல்குர்ஆன் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பது போன்று மகாவம்சமும் தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.
முஸ்லிம் கடைகளுக்குச் செல்லாதீர்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்களைப் பகிஷ்கரியுங்கள் என்று ஒருசாரார் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். சிங்களவர்களின் கடைகளிலே பொருட்களைக் கொள்வனவு செய்யுங்கள் என்கிறார்கள். அவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சிலகாலம் கழித்து முஸ்லிம் கடைகளுக்குச் செல்வார்கள். ஏனென்றால் முஸ்லிம்கள் உதவி செய்பவர்களாக இருக்கிறார்கள்.
எமது சமயம் என்று இறுக்கமான கோட்பாட்டில் இருந்தவர்களுக்கு வரலாற்றில் இடம் கிடைக்கவில்லை. நாம் எந்த சமயத்தவர்களாக இருந்தாலும் எமக்குள் நற்குணங்கள் இருக்கவேண்டும். இதுதான் எமது கலாசாரம்.
பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்களை விட முஸ்லிம் மாணவிகளையே காண்கிறேன். முஸ்லிம் மாணவர்கள் கல்வியில் ஆர்வமின்றி இருக்கிறார்கள். மாணவிகளே கல்வியில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். முஸ்லிம் மாணவர்கள் குறுகிய காலத்தில் பெரும் பணம் உழைத்துக் கொள்ள வேண்டும், பெரிய வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்ற இலட்சியம் கொண்டவர்களாக கல்வியில் அக்கறையின்றி பணம் ஈட்டும் செயற்பாடுகளிலேயே இருக்கிறார்கள். இதனால் ஏனைய மதத்தினருக்கு இவர்கள் மீது பொறாமை ஏற்படுகிறது. நாம் எமது வாழ்நாளில் எதனை உழைத்துக் கொள்ளவேண்டும் என தம்மபதவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. பணம் வாழ்க்கையில் நிம்மதியைத் தராது. எனது சமயம், எனது இனம் என்பதற்காகவே இலங்கையில் யுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம்கள் பற்றி சிங்களவர் மத்தியில் நிலவும் தவறான கருத்துகளை அல்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு நீக்கிவிடும் என்று நினைக்கிறேன். எமது நாட்டை ஆண்ட சிங்கள மன்னர்கள் இஸ்லாமிய நாடுகளுடன் தொடர்புகளைப் பேணியிருந்தமை வரலாற்று காலம் முதல் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் இருந்த ஒற்றுமையை பறைசாற்றுகிறது.
ஒவ்வொருவர் பேசும் மொழியின் உள்ளே தான் கலாசாரம் இருக்கிறது. எனவே நாம் கலாசாரத்தை கௌரவிக்க வேண்டுமென்றால் மொழி மீது பற்றுக்கொள்ள வேண்டும் அனைத்து மொழிகளையும் கற்கவேண்டும் என்றார்.
நீங்களும்,நாங்களும் ஒன்ராக இணைந்து Sri Lanka வில் வாழ முடியும்.எத்தைனையோ தலைமுறையாய் அவ்வாறுதான் வாழ்ந்து கொண்டிருந்த எம்மிடையே பிளவை ஏற்படுத்தியது (டயக்ஷ் போரா புலிகள்) பொறாமை கொண்ட அந்த மூன்ராம் இனம் நம்மை பிரிக்க துடிக்கிறது.ஆனால் அந்த பொரமை தான் அழித்து விட்டது முள்ளிவாய்க்காலில்.அதுதான் இப்போது அவர்களுக்கு தாங்கிக்கொள்ள முடியவில்லை.சதிவலையுடன் சில பிக்குகலுக்கு பணத்தை கொடுத்து அலையுரானுக.ஆனால் சிங்கள மக்களில் 95% மக்கள் இன்னும் Muslim மக்களோடுதான் உள்ளார்கள் என்பதை இந்த பாசிச வாதிகள் புரியும் காலம் விரைவில்.
ReplyDeleteIt's really
ReplyDeleteAll oK. Failed to implement Tamil as a national lunguage in proper way was the main cause for the ethnic and religious riots and the war country faced which professor should mentioned here.
ReplyDelete