Header Ads



இஸ்­லா­மிய கல்வி என்ற பெயரில், தற்­கொலை குண்­டு­தா­ரி­கள் தயாரிப்பு - மத்­ரஸாக்கள் பெளத்­தர்­க­ளுக்கு எதி­ராக செயற்­படுகின்றன

இஸ்­லா­மிய சர்­வ­தேச கல்வி என்ற பெயரில் தற்­கொலை குண்­டு­தா­ரி­களை தயா­ரிக்கும் நட­வ­டிக்­கையே கிழக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. நூறு தற்­கொ­லை­தா­ரி­களை உரு­வாக்க முயற்­சித்தால் குறைந்­தது 50 ஆயிரம் பேரா­வது தெரி­வு­செய்­தி­ருக்க வேண்டும். இது இடம்­பெ­று­வது தெரிந்தும் அர­சியல் தலை­வர்கள் வேடிக்­கையே பார்த்­தனர் என அது­ர­லியே ரதன தேரர் சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெற்ற அவ­ச­ர­கால சட்ட ஒழுங்கு விதி­களை நிறை­வேற்­று­வ­தற்­கான சட்­ட­மூலம் மீதான விவா­தத்தில் உரை­யாற்­றும்­போதே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் அதன்­போது தெரி­விக்­கையில்,

இஸ்லாம் பயங்­க­ர­வாதம் குறித்து எம்மால் பேச அச்­ச­மாக உள்­ளது, தேர்தல் வாய்ப்­பு­க­ளுக்­காக நாம் வாய்­மூடி இருக்­கின்றோம். முதலில் தமிழ், முஸ்லிம் சிறு­பான்மை மக்கள் பிர­தான கட்­சி­க­ளுடன் இணைய வேண்டும். அல்­லது கொள்­கை­யுள்ள கட்­சி­களை சார வேண்டும். இந்த ஆட்சி பல­வீ­ன­மா­னது. ஜனா­தி­ப­திக்கு இந்த தலை­மைத்­து­வத்தை கொண்டு நடத்த முடி­யாது என்­பதை அவர் உறு­திப்­ப­டுத்­தி­விட்டார். நாட்டில் தேசத்­து­ரோக செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. அதேபோல் பிர­தமர் இந்த துரோக செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்டும். நாம் தலை­மைத்­து­வத்தை ஏற்க தயா­ரா­கவே உள்ளோம்.

ஒரு சிறு குழு­வி­னரின் தீவி­ர­வாதக் கொள்­கைக்கு முழு இனமும் அடி­ப­ணிய வேண்­டிய நிலைமை மத்­திய கிழக்கு நாடு­களில் உரு­வா­கி­யுள்­ளது. இன்று இங்கும் மத்­ரஸா பாட­சா­லைகள் உரு­வாக்­கப்­பட்டு பெளத்­தர்­க­ளுக்கு எதி­ராக செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இது குறித்து புல­னாய்வு தகவல் கிடை­கின்­றது. இதற்கு கோடீஸ்­வர வியா­பா­ரிகள் உத­வு­கின்­றனர். ஜே.வி.பியி­ன­ருக்கு இது தெரி­யா­தி­ருக்­கலாம். ஆனால் அவ்­வா­றான நபர்­களே வீடு­களில் பயங்­க­ர­வா­தி­களை வளர்க்­கின்­றனர். இன்று இந்த நாட்­டினை இரத்த வெள்­ளத்தில் ஓட­வி­டவே இவர்கள் முயற்­சித்து வரு­கின்­றனர். இந்த நாட்­டி­லேயே ஐநூறு தற்­கொ­லை­தா­ரிகள் இருக்க வாய்ப்­புள்­ளது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அவ­ருடன் உள்ள ஒரு குழுவும் புல­னாய்வு பிரிவை தண்­டிக்கும் நிலையில் உள்­ளனர். முழு­மை­யாக ஐக்­கிய தேசிய கட்சி இதற்கு இணக்கம் தெரி­விப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

இஸ்­லா­மிய கல்­வியை கற்­பிக்க கிழக்கில் சர்­வ­தேச பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. கல்வி என்ற பெயரில் தற்­கொலை குண்­டு­தா­ரி­களை தயா­ரிக்கும் நட­வ­டிக்­கையே முன்­னெ­டுக்­கப்­பட்டு வருகின்றது. இவை இடம்பெறுவது தெரிந்தும் அரசியல் தலைவர்கள் வேடிக்கையே பார்த்தனர் இதனை முழுமையாக தடுக்க வேண்டும். இதற்கு முஸ்லிம் மக்களும் உதவி செய்ய வேண்டும். இதற்கான மாற்று நகர்வுகளை உருவாக்க வேண்டும். ஆறு மாதத்தில் புதிய தலைமைத்துவம் ஒன்றினை உருவாக்கி மாற்றுவோம் என்றார்.

vidivelli

1 comment:

Powered by Blogger.