முள்ளிவாய்க்காலில் வெடித்துச்சிதறிய குண்டுகள், குப்பைகளுக்கு தீ மூட்டியபோது பயங்கரம்
முல்லைத்தீவு-முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட குண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளது.
10 வருடங்களாக கைவிடப்பட்டிருந்த தனி நபர் ஒருவருடைய 2 ஏக்கர் வயல் காணி உரிமையாளரினால் சுத்தப்படுத்தி குப்பைகளுக்கு தீ மூட்டப்பட்டது.
இதன்போது காணி நிலத்தில் மறைந்நிருந்த குண்டுகள் சில வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தம் நிகழ்ந்த பகுதி என்பதால் காணி உரிமையாளரும் வேலையாட்களும் பற்றைகளுக்கு தீ மூட்டிய பின்னர் அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றிருந்தனர்.
இதனால் அவ்விருவரும் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இறுதி யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதும் முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பிரதேசங்களில் அபாயகரமான வெடிபொருட்கள் இன்னமும் முற்றுமுழுதாக அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment