Header Ads



பயங்கரவாதிகளை காட்டிக்கொடுத்து, சிறந்த முன்மாதிரியை பின்பற்றிய பள்ளிவாசல் நிர்வாகம்

சாய்ந்தமருது பகுதியில் நேற்றைய தினம் சந்தேகத்துக்கிடமான முறையில் குடியேறியோர் தொடர்பில் அங்குள்ள ஹிஜ்ரா பள்ளிவாசல் நிர்வாகமே பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களை நேரடியாக விசாரித்ததில் அதிருப்தி கண்ட பள்ளிவாசல் நிர்வாகம், பொலிசாருக்குத் தகவல் வழங்கியிருந்த நிலையில் அங்கு சோதனைக்காக வந்த பொலிசார் மீது தாக்குதலும் பின் வீட்டுக்குள் குண்டுவெடிப்பும் இடம்பெற்றதன் பின்னணியில் இதுவரை வெளியான உத்தியோகபூர்வ தகவல் அடிப்படையில் 06 சிறுவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, 17 பேர் உயிரிழந்திருப்பதாக பிரதேசத்தில் தற்சமயம் கருத்து நிலவுகின்றமையும் குடியிருப்பு பகுதி மக்கள் இராணுவ சோதனைக்காக தற்காலிகமாக அருகில் உள்ள காரியப்பர் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. Sinhala media vulayum intha newsa post pannungka

    ReplyDelete
  2. அனைவரும் இதே போல் பின்பற்றவும்.பாராட்டப் பட வேண்டிய விடயம்.இதே போல 30 வருடங்களுக்கு முன் சிலர் செய்திருந்தால் இந்த பொருளாதாரத்திலும்,உயிர் இழப்புகளிலும் மிகப் பெரிய இழப்புக்களை தவிர்த்திருக்கலாம்

    ReplyDelete
  3. ஆகவே நம் நாட்டு உண்மையான முஸ்லிம்மக்கள் இஸ்லாதிட்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத இந்த பயங்கரவாத்த்தை அழித்தொலிக்க மிகவும் தூய்மையான உள்ளத்துடனும் நாட்டுபற்றுனும் பாதுகாப்புதுறைக்கு பலவிததிலும் உதவி வருகின்றோம் நம் மக்களின் வித்தியாசமான நடவடிக்களை நம் நாட்டு மக்களாலும் நம் நாட்டு பாதுகாப்புத்துறையாலும் மட்டும்தான் உண்மை இரகசியங்களை கண்டறியலாம் ஆகவே நம் பாதுகாப்பு புலனாய்வுத்துறை சரியான ஆய்வுகளை திசை திருப்பவே இந்த FBI நம் நாட்டுக்குள் வந்துள்ளார்கள் நம் நாட்டு பாதுகாப்புத்துறை அவர்களை நன்றாக கண்காணிப்பு செய்யவேண்டும்

    இலங்கை நாட்டு முஸ்லிம்,பௌத்த,இந்து,கிருஸ்தவமக்களே நாம் அனைவரும் நம் பாதுகாப்பு, புலனாய்வுத்துறையுடன் சேர்ந்து அவர்களுக்கு நம்மலால் இயன்ற முறையில் உதவிசெய்வோம் நம்முன்னால் யாராவது சந்தேகிதிட்குறிய முறையில் வாழ்ந்தால் அவர்களை விசாரித்து அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகமிருந்தால் அவர்களை காவல்நிலையத்திட்கு அறிவிப்போம்

    நீங்கள் உங்கள் வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தால் அதில் யார் வாழ்கின்றார்கள் என்று நன்றாக கவனியுங்கள் மேலும் நம் பக்கத்து வீடுகளை யாராவது குறிகிய காலத்திட்குள் வாடகைக்கு வந்துருந்தாள் அவர்களை நன்றாக கவனித்து ஏதாவது சந்தேகித்தால் காவல் நிலையத்திட்கு அறிவித்து நம் நாட்டை நாம் காப்பாற்றுவோம்

    நம் நாட்டு பொக்கிசங்களை சூரையாட திட்டம் தீட்டியுள்ள அமெரிக்க கள்ளர்களையும் ஏனைய கள்ளர்களைய்யும் விரட்டியடிப்போம்

    ReplyDelete
  4. Mashaaallh,
    Also Mosque committee responsibilitiy to inform all drug
    Dealer to Police in there community.

    ReplyDelete
  5. எந்த தமிழனாவது இப்படி யுத்தகாலத்தில் புலி பயங்கரவாதிகளை காட்டிகொடுத்திருப்பானா? மாறாக வடகிழக்கிலிருந்து வந்த தமிழ் பயங்கரவாதிகளுக்கு கொழும்பில் அடைக்கலம் கொடுத்து கொழும்பில் குண்டு வைக்கவே உதவி செய்தார்கள்.

    ReplyDelete
  6. இங்கே FBIக்கும் அமெரிக்காவுக்கும் எதிரான வன்முறை கருத்தை பயங்கரவாதி ஒருவர் எழுதி இருக்கிறார். எமது அமெரிக்க அரசுக்கு எதிரான ஒவ்வொரு பயங்கரவாதியும் அடையாளம் காணப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவே FBI அங்கே வந்து இருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.