Header Ads



கோத்தபாயவை நிறுத்த முடியாது போனால், இன்னும் ராஜபக்சவினர் உள்ளனர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நிறுத்த முடியாது போனால், வேட்பாளராக நிறுத்த இன்னும் ராஜபக்சவினர் இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று -17- நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம், கோத்தபாய ராஜபக்சவை கண்டு பயப்படுவதால், பல்வேறு முறைகளை பயன்படுத்தி அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க முயற்சிக்கின்றது.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாத நிலைமையில் உள்ளது. ஒவ்வொருவர் சில நபர்களின் பெயர்களை கூறி வருவதாகவும் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. IT seems all other SLFP ministers are not suitable to become leaders... They always think.. Leader can only come from MARA family.

    ReplyDelete

Powered by Blogger.