Header Ads



முஸ்லிம் வர்த்தகர்கள், விபரங்களை திரட்டுகிறது புலனாய்வுப் பிரிவு - முஸ்லிம் அரசியல்வாதிகள் பற்றி, தனி விசாரணை


இலங்கையின் அனைத்து முஸ்லிம் வர்த்தகர்களின் விபரங்களை அரச தேசிய புலனாய்வுத்துறை திரட்டி வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக திடீரென உருவான வர்த்தகர்கள் – அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த பணம் -அவர்கள் இயக்கிய வர்த்தக நிறுவனங்கள் உட்பட்ட பல விடயங்களை புலனாய்வுத்துறை திரட்டி வருவதாக சொல்லப்படுகிறது.

இவற்றை தவிர அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் அடிக்கடி தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் தனி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொடையில் கைது செய்யப்பட்ட பிரபல வர்த்தகரின் இரண்டு மகன்மார் தற்கொலை தாக்குதலில் இறந்துள்ள சம்பவம் குறித்து புலனாய்வு விசாரணைகளை நடத்திய பொலிஸ் -இந்த வர்த்தகர் மற்றும் அவரின் சம்பந்தியான பிரபல நகைக்கடை வர்த்தகர் ஆகியோர் அரசின் உயர்மட்ட அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்ததாக அறிந்துள்ளதாக தகவல்.

இது குறித்து விசேட அறிக்கை ஒன்றும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. Tn

1 comment:

  1. மார்க்கத்தின் மூலமாக ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளாதவர்ள் சட்டத்தின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.