தயவுசெய்து இதை எல்லோரும், புரிந்து கொள்ளுங்கள்...!
ஒரு தீவிரவாத இயக்கத்தின் மோசமான சிந்தனை கொண்ட முட்டாள்கள், ஒரு மார்க்கத்தின் பெயரால் ஒரு அநீதியை செய்கிறார்கள்.
அந்த நாசகார செயலுக்குப்பின்னால், முழு முஸ்லிம் சமூகமும் இருப்பது போலவே சிலர் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.
முஸ்லிம்களுக்கு பெறும் அநீதி இழைக்கப்பட்ட திகன கலவரம், அலுத்கம கலவரம் போன்றவற்றின்போதுகூட ஒரு குழுவாக களத்தில் இறங்காத முஸ்லிம் சமூகத்தை ஏதாவது ஒரு நசாகர செயலை நாட்டில் செய்வதற்கு ஆயுதங்களை மறைத்து வைத்துருந்தவர்கள் போன்று சித்தரிக்க சில ஊடகங்களும், சில தனிமனிதர்களும் பெரும் பிரயத்தனம் எடுப்பதை அவதானிக்க முடிகின்றது.
எமது சமூகத்தில் சில திருத்தப்பட வேண்டிய விடயங்கள் இருக்கின்றன.
அதே போல் இலங்கையில் இருக்கும் ஏனைய சமூகங்களும் நூறுவீதம் சுத்தமானவர்கள் அல்ல.
எல்லா சமூகத்திலும் பிழைகளும், பிழையான மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இங்கே கைப்பற்றப்படும் ஆயுதங்கள் மற்றும் கைதாகும் தனிமனிதர்களுக்குப் பின்னால் யாராவது பிழையான மனிதர்கள் இருப்பார்கள்,
அல்லது அறியாமையினால் மாட்டிக் கொள்ளும் மடையர்களும் இருப்பார்கள்.
மாறாக இவை பள்ளிகளில் திட்டமிட்டு, நிர்வாகக் கூட்டங்களில் முடிவு செய்து பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்கள் இல்லை.
எனவே இந்த நாசமாப்போனவனுகள் செய்த சில நாசகாரச் செயல்களை வைத்து, பல வருடங்களாக இந்த நாட்டில் நிறைய அநீதிகளுக்கு உற்படுத்தப்பட்ட பொழுதுகூட ஆயுதம் தூக்காத ஒரு சமூகத்தை தீவிரவாதிகள் போன்று சித்தரிக்க யாரும் வர வேண்டாம்.
Safwan Basheer
Post a Comment