முஸ்லிம்களை சந்தேகிக்க கூடாது, முஸ்லிம்கள் முழு ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்
நாட்டில் உள்ள முஸ்லிம்களை சந்தேகக் கண்ணில் பார்க்கும் செயற்பாடுகளை கைவிட வேண்டும். இது குறித்த விசாரணையில் முஸ்லிம்கள் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர் என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட அமர்வுகளின் போது உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
மிகவும் அமைதியாக வாழ்ந்துவந்த எமது நாட்டினை ஒரு குறுகிய பயங்கரவாத அமைப்பினால் நாசமாக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இவ்வாறான நாசகார செயற்பாடு இடம்பெற்றுள்ளது. தேவாலயங்கள், ஹோட்டல்கள் இலக்குவைக்கப்பட்டுள்ளன. இதனால் பல பொதுமக்களை நாம் இழந்துள்ளோம். இவர்கள் அனைவருக்கும் எமது அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.
அதேபோல் இவ்வாறான செயற்பாடு காரணமாக நாட்டில் உள்ள முஸ்லிம்களை சந்தேகக் கண்ணில் பார்க்கும் செயற்பாடுகளை கைவிட வேண்டும். இது குறித்த விசாரணையில் முஸ்லிம்கள் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர். ஆகவே இனவாதம், மதவாதம் ஆகியவற்றை கைவிட வேண்டும்.
கொலையாளிகளை முஸ்லிம்கள் மிகவும் வெறுக்கின்றனர். தவறான நடவடிக்கைகள் மூலம் புதிதாக ஆத்திரம் கொண்டோர் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது.
ReplyDelete