Header Ads



தம்பியின் கடனை செலுத்தாமைக்காக, குத்திக் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மின்சார சபை ஊழியரான 28 வயதான குடும்பஸ்தர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அம்பலாங்கொட பிரதேசத்தில் நடந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொட பிரதேச்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரின் தம்பி வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகிறார். அவர் பெற்றுக்கொண்ட கடனை, கொல்லப்பட்ட நபரிடம் பல முறை கேட்டுக்கும் கொடுக்காத காரணத்தினால், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த போது கொல்லப்பட்டவரின் மனைவி வீட்டில் இருந்துள்ளதுடன் கொலை செய்த இரண்டு நபர்களை அவர் அடையாளம் கண்டுள்ளார். அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த தந்தையும் மகனும் இந்த கொலையை செய்துள்ளனர்.

இதேவேளை, கொலை செய்த சந்தேக நபர்கள் பிரதேசத்தில் இரு்து தப்பியோடியுள்ளனர். அவர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.