Header Ads



பஸ்ஸில் பொதி ஒன்றை வைத்துவிட்டு, மக்களிடையே புரளியை பரப்பியவர் கைது

அம்பலாந்தொட்ட, கொக்கல்ல சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ.போ.ச பஸ்ஸில் பொதி ஒன்றை வைத்து விட்டு மக்கள் இடையே புரளியை பரப்பிய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ.போ.ச பஸ் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று இருப்பதாக நேற்று அம்பலாந்தொட்ட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் விஷேட அதிரடிப் படை மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரை அழைத்து சோதனை செய்த போது அது மக்களை பீதிக்கு உட்படுத்த தயாரிக்கப்பட்ட பொதி என்பது தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் மக்கள் மத்தியில் புரளியை ஏற்படுத்த முயற்சித்த சந்தேகநபர் தொடர்பில் விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். 

No comments

Powered by Blogger.