Header Ads



தேர்தலுக்குமுன் கோத்தபாய சிறைக்குச் செல்வார், ஜனாதிபதி வேட்பாளராக ரணில் போட்டியிடுவதே என் விருப்பம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிறைக்குச் செல்வார் என முன்னாள் இராணுவத் தளபதியும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட முன்னதாகவே சிறைக்குச் செல்ல நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோத்தபாயவிற்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள ஊழல் மோசடி வழக்குகளை பார்த்தால் சிறைக்குச் செல்வார் என்றே நான் கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருப்பார் என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே போட்டியிட வேண்டுமென தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.