Header Ads



இலங்கையிலிருந்து அமெரிக்கர்களை, வெளியேறுமாறு கோரிக்கை

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கர்களை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கோரியுள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்க அரச ஊழியர்களின் பாடசாலை செல்லும் மாணவர்கள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இலங்கையிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கையிலிருந்து தாமாக முன்வந்து வெளியேறும் அமெரிக்க அரச ஊழியர்களுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஊக்கமளித்துள்ளது. 

இலங்கையில் மேலும் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறலாம் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அச்சம் வெளியிட்டுள்ளது.

அத்துடன் இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு பாதுகாப்பு காரணங்களையிட்டு மட்டுப்படுத்தப்பட்ட அவசரகால சேவையை மட்டுமே வழங்கப்பட முடியும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

(எம்.மனோசித்ரா)

1 comment:

  1. அப்போ நீங்க எல்லாரும்(அமெரிக்கா , இஸ்ரேல், Israel Secrete Intelligence Services அதுதான் ISIS) போட்ட திட்டத்தில் இன்னும் மீதி இருக்கோ???

    ReplyDelete

Powered by Blogger.