சஜித்துடன் ஒருமித்து பயணிக்கவே விரும்புகின்றேன், எந்த முரண்பாடும் கிடையாது - ரவி
அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் தனக்கு எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், அமைச்சர் சஜித் பிரேமதாசவே சில சந்தரப்பங்களில் தன்னுடன் முரண்பட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர்களான சஜித் பிரேமதாசவுக்கும், ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது. தொடர்ந்து அவருடன் ஒருமித்து பயணிக்கவே நான் விரும்புகின்றேன்.
எனினும், சில சந்தர்ப்பங்களில் அவரே என்னுடன் கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்தி கொள்கிறார். இந்த விடயத்தினால் பிரச்சினைகள் எதுவும் ஏற்படப் போவதில்லை.
எவ்வாறாயினும், முரண்பாடுகளை தீர்த்துக்கொண்டு அவருடன் தொடர்ந்து பயணிக்கவே நான் விரும்புகிறேன்” என அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment