Header Ads



நாட்டில் எங்கேனும் தீவிரவாதக் குழுக்கள் இருந்தால், அவற்றை முற்றாக அழிப்போம் - ரணில்

தீவிரவாதத் தாக்குதல்களை முறியடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முப்படையினரின் ஒத்துழைப்புடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் எங்கேனும் தீவிரவாதக் குழுக்கள் இருந்தால் அவற்றை முற்றாக அழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் முன்னெடுப்பதற்கு அரசு தயார் நிலையில் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.

 இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் பல சர்வதேச நாட்டுத் தலைவர்கள் தீவிரவாதத்தை அழிப்பதற்கும் பூரண ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதற்கு தயாரகவுள்ளதாகவும் தொலைப்பேசியில் அழைப்புவிடுத்து தெரிவித்தனர் என்றும் பிரதமர் கூறினார். அத்துடன், உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு ஆரம்பகட்ட இழப்பீடுகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.