சிரியாவில் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களே, இலங்கையில் தாக்குதலை நடத்தினர் - ரணில்
இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் போர் பயிற்சி பெற்று மீண்டும் நாடு திரும்பிய இலங்கையர்கள் சிலரே கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சிலரிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment