Header Ads



ரண்முத்துகல சங்கரெத்தின தேரர், கல்முனையில் இனக்கலவரம் ஏற்படுத்த முயற்சி


முஸ்லிம், தமிழ், சிங்கள, கத்தோலிக்க மக்கள் ஒற்றுமையுடன் வாழுகின்ற கல்முனை மாநகரில் இனக்கலவரம் ஒன்றை தூண்டி இங்கு வாழும் மக்களின் புரிந்துணர்வில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அண்மைக் காலமாக கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல சங்கரெத்தின தேரர் செயற்படுவது வேதனையளிப்பதாக மறுமலர்ச்சி மன்றத்தின் முக்கிய செயற்பாட்டாளரான அஹமட் புர்க்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த முப்பது வருட காலங்களுக்கும் மேலாக கல்முனையில் இயங்கிவரும் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது போலியான தேர்தல் வாக்குறுதியை வழங்கியது மாத்திரமல்லாது, கடந்த யுத்த காலத்தின் போது சட்டவிரோதமாக ஆயுதமுனையில் கொண்டு செல்லப்பட்டதுதான் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்ற உண்மையை அப்பாவி தமிழ் மக்களிடம் மறைத்து குறித்த தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு முஸ்லிம்கள் தடையாக இருக்கிறார்கள் என்ற அப்பட்டமான பொய்யுரைத்தும் வருகிறார்கள். 

இவ்வாறு தமிழ் மக்களின் மத்தியில் போலியான பரப்புரைகளை கொண்டு சென்று தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்தி அடுத்து வரும் தேர்தலில் தமது வெற்றி இலக்கை அடையும் நோக்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய சில பிரமுகர்கள் பாடுபடுகிறார்கள்.

இதுதொடர்பில் எதுவிதமான தெளிவும் இல்லாத நிலையில் ஊடக அறிக்கைகள் மூலமாக தமிழ் முஸ்லிம் மக்களின் புரிந்துணர்வில் விரிசலை ஏற்படுத்தும் விதமாக அண்மைக்காலமாக கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல சங்கரெத்தின தேரர் செயற்படுவது அவரது எதிர்கால அரசியல் நோக்கத்தை நிரைவேற்றவே தவிர தமிழ் மக்கள் மீதான அக்கறையல்ல என்பதை தமிழ் மக்கள் புரிந்து செயல்பட வேண்டும்.

எமது கல்முனை மறுமலர்ச்சி மன்றத்தினால் குறித்த சட்டவிரோத பிரதேச செயலகம் தொடர்பிலும் அதனால் தமிழ் முஸ்லிம் மக்களிடையே உள்ள அச்சத்தையும் சந்தேகத்தையும் கலையும் விதமாகவும் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடை தடை செய்வதில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் விகாராதிபதி ரண்முத்துகல சங்கரெத்தின தேரரும் அதிக முனைப்புடன் செயல்பட்டார். குறித்த ஊடக மாநாடை நடத்த விடாமல் எமது மன்றத்தின் தலைவருக்கு எதிராக கல்முனை பொலிசில் முறைப்பாடு செய்து தடுப்பதற்காக தொடர் முயற்சியில் ஈடுபட்டனர். சமூக ஒற்றுமை, நல்லிணக்கத்தை விரும்பும் எமது கல்முனை மறுமலர்ச்சி மன்றத்தை இனவாத குழுவாக செயல்படுவதாக சிலர் தமிழ் மக்கள் மத்தியில் உண்மைக்கு புறம்பான விமர்சனம் செய்கின்றனர். 

இவ்வாறான போலி விமர்சனத்தின் ஊடாக ஏற்பட்ட சந்தேகத்தை கலையும் விதமாக நாம் ஊடக மாநாட்டை வேறு இடத்தில் ஏற்பாடு செய்து தெளிவுபடுத்தியுள்ளோம்.

தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு குறித்த சட்ட விரோத தமிழ் பிரதேச செயலகத்திற்கு எதிராக எமது மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவர் நஸிர் ஹாஜியார் கொழுப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.வழக்கின் தீர்ப்பு எமது மறுமலர்ச்சி மன்றத்தின் தலைமையின் முயற்சிக்கு வெற்றியாக அமையும் எனவும் தெரிவித்தார்.

மேலும் " இனவாதம் கருவான கல்முனையில்- கோட்பாடுகளை மீறிய கூப்பாடுகள்" என்ற புத்தகம் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. கல்முனையில் கடந்த முப்பது வருடங்களாக கல்முனை வடக்கு தமிழ் மக்களும் சக்திகளுக்கும் கல்முனைக் குடி முஸ்லிம் மக்கள் சமூக சக்திகளுக்கிடையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக முறுகல் நிலை தொடர்கிறது. கல்முனையில் முஸ்லிம் தமிழ் மக்கள் இணைந்து பொது முடிவு ஒன்றை எடுக்க இயலவில்லை என்பதுதான் பிரச்சினை. சம்பந்த பட்ட துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கல்முனையைச்சேர்ந்த மாண்புமிகு ஹாரிஸ் அவர்களிடம் இறுதி முயற்சியாக பிரதேச செயலகம் தொடர்பாக 30 வருடங்களாக பிழவு பட்டிருக்கும் கல்முனை வடக்கு தமிழ் மக்களையும் கமுனைக்குடி முஸ்லிம் மக்களையும் இணைத்து பொது முடிவை எடுக முயற்சி எடுக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன். அதற்க்கு சாத்தியமில்லாத பட்சத்தில் தமிழ் மக்களின் 30 வருட கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் முஸ்லிம் இன உறவை பாதுகாக்க வேண்டுமென விண்ணப்பிக்கிறேன். 30 வருட இன முறுகல் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மற்றவர்களை குறை கூறுவது அபத்தமானதாகும்.

    ReplyDelete
  2. இவர்களின் வேலயே இதுதானே,அப்பாவி தமிழ் மக்கலை பலிக்கடாவாகுவது,கரிவேப்பிலயாக பாவிப்பது.இது முதலில் சொல்லுங்க ஜெயபலன் அவர்கலே,Sri Lanka ராணுவத்தை சர்வதேசத்துக்கு முன் நிருத்தி தண்டனை கொடுக்கவேண்டும் என ஜெனிவாவில் வாதாடும் புலி ஆதராவாலர்கல்லை முதலில் விசாரிக்க வேண்டும் .muslim கலுக்கு செய்த பயங்கரவத நடவடிக்கைக்காக்

    ReplyDelete
  3. @Rizad, யுத்த காலங்களில், இலங்கை ராணுவம், புலிகள் இரண்டும் செய்த சகல மனித உரிமை மீறல்களும் தெட்டத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிலும் முஸ்லிகள் பாதிக்கப்பட்டதாக இல்லை.

    இலங்கையின் நீதிமன்றங்களில் கூட இதுவரை புலிகள் முஸ்லிம்களை தாக்கியதாக ஒன்றும் வழக்குக்கு பதிவுகளும் இல்லை.

    நீங்கள் எங்கும் போய் வழக்குகள் போட்டால் தானே விசாரிப்பார்கள்.
    அது வரை எல்லாம் வதந்திகளும் கட்டுக்கதைகளும் தான்.

    ReplyDelete

Powered by Blogger.