Header Ads



யாரும் சட்டம் ஒழுங்கை, கையிலெடுக்க முயற்சிக்கக் கூடாது - கார்தினல் ரஞ்சித் மெல்கம்


நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு சம்பவங்கள்  தொடர்பில் கார்தினல் ரஞ்சித் மெல்கம் ¨ யாரும் சட்டம் ஒழுங்கை கையிலெடுக்க முயற்சிக்கக் கூடாது. எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு துறைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இது குறித்து பொது மக்கள் பதற்றமடையாமல் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

அத்தோடு தற்போது இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் படுகாயமடைந்தவர்களுக்கு இரத்தம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இயலுமானவரை அவர்களுக்கு இரத்ததானம் செய்யுமாறு கோருகின்றேன்.

அத்தோடு விடுமுறையிலுள்ள வைத்தியர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி சேவைக்கு திரும்புமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன், எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.