இரத்தினபுரியை திடீரென தாக்கிய டொனேடோ, தூக்கி வீசப்பட்ட இல்லங்கள்
இரத்தினபுரி மாவட்டத்தில் சீவலி விளையாட்டு மைதானத்தை நேற்றைய தினம் திடீரென ஏற்பட்ட டொனேடோ சூறாவளி தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மைதானத்தில் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுகொண்டிருந்த வேளையிலேயே, இந்த சூறாவளி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தால் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இல்லங்களும் தூக்கியெறிப்பட்டு முற்றாக அழிவடைந்தன.
எனினும் பொதுமக்கள் யாவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் நிகழவில்லையெனத் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment