Header Ads



பலாங்கொடையிலிருந்து முக்கிய, பொருட்கள் மீட்பு

பலாங்கொடை- கிரிமெட்டிதன்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்றும், கெப் ரக வாகனம் ஒன்று பரிசோதிக்கப்பட்ட போது, அங்கிருந்து  நாடாளுமன்ற நுழைவு அட்டைகள், வெடிப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது, நாடாளுமன்ற நுழைவு அட்டைகள் 6, கைக்குண்டுகள், நாடாளுமன்றத்துக்கு உட்பிரவேசிக்கும் வீதி தொடர்பான வரைபடம், கைத்தொலைபேசிகள் 2, சிம் அட்டைகள் 2 என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது கொழும்பில் விடுதி ஒன்றில் பணிபுரியும் 27 வயதுடைய இளைஞரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இன்றைய தினம் பலாங்​கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.