Header Ads



இது மிகவும் திட்டமிடப்பட்ட தாக்குதல் - புலனாய்வுப் பிரிவு பதில் சொல்ல வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

நாட்டில் இவ்வளவு பாரிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறும் வரையில் புலனாய்வுத் துறையினர் எங்கிருந்தனர் ? என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் சாதாரணமான ஒன்று அல்ல. நீண்ட காலம் திட்டமிட்ட ஒன்று. சந்தர்ப்பம் பார்த்து முன்னெடுக்கப்பட்டவை. இவ்வளவும் இடம்பெறும் வரையில் இந்நாட்டில் புலனாய்வுப் பிரிவினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு புலனாய்வுப் பிரிவு பதில் சொல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

No comments

Powered by Blogger.