Header Ads



இலங்கையிடம் மதூஷை, ஒப்படைக்க இணக்கம் - பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவார்

ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் அபு­தாபி நகரில் களி­யாட்­டத்தின் இடையே கைது செய்­யப்­பட்டு தற்­போது டுபாயில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பிர­பல பாதாள உலகத் தலைவன் மாகந்­துரே மதூஷை இலங்­கை­யிடம் ஒப்­ப­டைக்க டுபாய் இணக்கம் தெரி­வித்­துள்­ளது.

எனினும் மதூஷ் தன்னை இலங்­கைக்கு நாடு கடத்த வேண்டாம் என மேன் முறை­யீடு செய்­துள்ள நிலையில், அந்த மேன் முறை­யீடு எதிர்­வரும் 18 ஆம் திகதி ஆரா­யப்­ப­ட­வுள்­ள­தா­கவும், அதன் பின்னர் தீர்­மானம் எடுக்­கப்­பட்டு பெரும்­பாலும் அவர் இலங்­கைக்கு நாடு கடத்­தப்­ப­டலாம் என டுபாய் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த வாரம் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி திலக் மாரப்­பன, டுபாய் சென்று அங்கு அமீ­ர­கத்தின் வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் அன்வர் பின் மொஹம்­மட்டை சந்­தித்­தி­ருந்தார். இதன் போது மதூஷை இலங்­கை­யிடம் ஒப்­ப­டைக்கும் படி அவர் வேண்­டி­யி­ருந்தார். இந்த சந்­திப்பின் போது சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் உயர் அதி­காரி ஒரு­வரும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒரு­வரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இந் நிலை­யி­லேயே மதூஷை இலங்­கை­யிடம் ஒப்­ப­டைக்க டுபாய் இணக்கம் தெரி­வித்­த­தாக அறிய முடி­கின்­றது. மதூஷை இலங்­கைக்கு நாடு கடத்தும் போது, இலங்­கை­யிடம் முன் கூட்­டியே அறி­விப்­ப­தா­கவும், விமா­னத்­திலும் பலத்த பாது­காப்­புடன் அவரை அழைத்து வந்து இலங்கையிடம் ஒப்படைப்பதாகவும் இதன்போது டுபாய் உயர் மட்டத்தினர் இலங்கையிடம் உறுதியளித்துள்ளதாக தெரிகின்றது.

1 comment:

  1. கேடுவரும் பின்னே மதி கெட்டுவரும் முன்னே.முன் செய்யின் பின் விளையும்.

    ReplyDelete

Powered by Blogger.