Header Ads



ஐக்கிய தேசியக் கட்சிக்கு, கோத்தபாய தொடர்பான காய்ச்சல்


ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று கோத்தபாய தொடர்பான காய்ச்சல் வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு கதைகளை தற்போது கூறிக்கொண்டிருக்கிறது. அதாவது, லசந்த விக்கிரமசிங்க கொலை வழக்கு தொடர்பாக, அமெரிக்காவில் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட வேண்டுமானால், அமெரிக்காவின் பிரஜாவுரிமையை இரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.

இவை இரண்டும் பொய்யான குற்றச்சாட்டுக்களாகும். உண்மையில், லசந்தவின் கொலை வழக்கில் இந்த அரசாங்கத்துக்கு அக்கறையில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது, இந்த கொலைக் குற்றவாளிகளின் பெயர்கள் நாடாளுமன்றில் கூறப்பட்டன.

அந்தவகையில், இந்த கொலையை செய்தது யார் என்று தற்போதைய பிரதமருக்கு நன்றாகத் தெரியும். எனினும், இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதமர் ரணிலுக்கு முடியாது.

இதைவிடுத்து, ஏனையோர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதால்தான் இந்த வழக்கு விசாரணை இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரான உதயகம்மன்பில குறிப்பிட்டுளார்.

No comments

Powered by Blogger.