ஜனாதிபதியுடன் தனியறையில் சஜித் - அதிர்ச்சியடைந்த ரணில்
ரூபவாஹினி கூட்டுத்தாபன புதிய தலைவர் நியமனத்தில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அமைச்சரவையில் நேற்று பேசவிருந்தாராம் பிரதமர்.
ஆனால் அங்கு அந்த விடயம் பேசப்படாததால் அமைச்சரவை கூட்டம் முடிந்த பின் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட ரீதியில் பேச தீர்மானித்தார் ரணில்.
அதன்படி கூட்டம் முடிந்த பின்னர் ஜனாதிபதியின் அறைக்கு பிரதமரும் அமைச்சர் கபீர் ஹஷிமும் சென்றனர். அப்படிச் சென்றபோது அந்த அறைக்குள் ஜனாதிபதியுடன் அளவளாவிக் கொண்டிருந்தாராம் அமைச்சர் சஜித் பிரேமதாச.
இதனை கண்டு அதிர்ச்சியுற்ற பிரதமர் ரணில் -அதனை காட்டிக்கொள்ளாமல் ரூபவாஹினி விடயத்தினை பற்றி பேசியதாக தகவல். இந்த விடயத்தை தான் கையாள்வதாக ஜனாதிபதி அதன்போது தெரிவித்துள்ளார். பிரதமர் பேசி முடிந்து திரும்பும்வரை சஜித் ஆசனத்தில் இருந்து எழும்பவில்லையாம்.
இது ஒருபுறமிருக்க அமைச்சர் மலிக்குடன் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தனிப்பட்ட சந்திப்பொன்றை நடத்தியுள்ளதாக தகவல்.
Tn
Post a Comment