முஸ்லிம்களிடையே அச்சநிலை - வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் உறுதி
முஸ்லிம்கள் மத்தியில் இன்று பெரும் அச்சநிலை காணப்படுவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பைப் பெற்றுத்தருமாறும் முஸ்லிம் குழு விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, அனைத்து இன மக்களதும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த அரசாங்கம் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ நாளில் பள்ளிவாசல்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட போது நாட்டிலுள்ள அனைத்து ஜும்ஆப்பள்ளி வாசல்களுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை உரிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதாக பாதுகாப்புச் செயலாளர் உறுதியளித்துள்ளார்.
Post a Comment