Header Ads



கல்முனையில் இளநீர், வெள்ளரிப்பழம், வர்த்தப்பழம் விற்பனை அதிகரிப்பு

நாட்டில் தற்போது நிலவும்   திடீர் வெப்பநிலை  மாற்றம் காரணமாக கிழக்கு   மாகாணத்தில்  அம்பாறை மாவட்டத்தின் கல்முனை   பிரதான   வீதியோரங்களில் அதிகமாக இளநீர் , வெள்ளரிப்பழம், வர்த்தப்பழம்  ஆகியன  விற்பனை  செய்வதை காண முடிகிறது. 

உடலின் வெப்பத்தை தணிப்பதற்காக இவ் வகையான பழங்களை பொது மக்கள்  கொள்வனவு செய்து வருகின்றனர் .

இதேவேளை இளநீர் ரூபா 80 தொடக்கம் 100  ரூபாய் வரை  விற்பனை செய்யப்பட்டு வருவதுடன்   வர்த்தப்பழம் கிலோ 50 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக இப் பிரதேசத்தில் வெள்ளரிப்பழத்திற்கு மிகுந்த கிராக்கி காணப்படுவதுடன்  ஒரு வெள்ளரிப்பழம் 150 ரூபா முதல் 250ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு  வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

(எம்.என்.எம்.அப்ராஸ்)


No comments

Powered by Blogger.