Header Ads



சங்கீத கதிரை போட்டியில் பங்கேற்று, வெற்றிபெற்றவர் திடீரென மரணம்

தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அங்குணுகொலபொலஸ்ஸ பொலிஸாரினால் நேற்று புத்தாண்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் சஞ்ஜுவ என்ற 40 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

குறித்த நிகழ்வில் இடம்பெற்ற சங்கீத கதிரை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றமையினால் ஏற்பட்ட திடீர் உடல் கோளாறு காரணமாக அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் ஏற்கனவே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.