Header Ads



ஜம்இய்யத்துல் உலமா செயற்குழு உறுப்பினரின் வீட்டில், இராணுவத்தினர் அதிரடி சோதனை

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயற்குழு உறுப்பிரும் இளைஞர் பேரவையின் உறுப்பினருமான ஷெயிக் அர்க்கம் நூராமித்தின் இல்லத்தில் இராணுவத்தினர் அதிரடி சோதனை நடத்தினர்.

மாத்தறையில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு நேற்றிரவு பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் வருகை தந்து சோதனை நடத்தியதாக அவர்தெரிவித்தார்.

கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் காரணமாக முஸ்லிம்கள் அச்சமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், குறித்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இஸ்லாம் மதமானது தீவிரவாதத்துக்குத் துணைபோகும் மதமல்ல எனவும் சுட்டிக்காட்டினார்.

– செய்தியாளர் நிர்ஷன் இராமானுஜம் –

No comments

Powered by Blogger.