Header Ads



பயங்கரவாத சந்தேகநபர்களைக் பிடிக்க, இன்றுமுதல் புதிய சுற்றிவளைப்பு - இராணுவம் களத்தில் குதிப்பு

இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதலால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக இன்று முதல் புதிய சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கள், வாகனங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் தெரியப்படுத்துவதற்காக இராணுவ தலைமையகத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல்களை குறித்த இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு பொது மக்கள் அறிவிக்க முடியும்.

0112 – 43 42 51

0114 – 05 51 05

0114 – 05 51 06

0766 – 91 16 04

0112 – 43 33 35

No comments

Powered by Blogger.