Header Ads



தயார்நிலையில் இந்திய கொமாண்டோக்கள் - வரத் தேவையில்லை என்கிறார் மகிந்த


சிறிலங்காவுக்கு உதவுவதற்காக இந்தியா தனது சிறப்புப் படையான என்எஸ்ஜி எனப்படும், தேசிய காவல் படை கொமாண்டோக்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவில் அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை அடுத்து, பல்வேறு நாடுகளும் விசாரணைகளுக்கு உதவி வருகின்றன.

இந்த நிலையில், சிறிலங்காவுக்கு உதவி தேவைப்பட்டால், சிறப்பு படையான தேசிய காவல்படையை அனுப்புவதற்கு தயார் நிலையில் இந்தியா இருப்பதாக இந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

சிஎன்என்-நியூஸ்18 தொலைக்காட்சியே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

2
சிறிலங்காவில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா தேசிய காவல்படை கொமாண்டோக்களை அனுப்ப வேண்டிய தேவை இல்லை என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிஎன்என்-நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சிறிலங்காவுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும், வழங்குவதற்குத் தயார் நிலையில், இந்தியாவின் சிறப்புப் படைகள் தயார் நிலையில் இருப்பதாக, இந்திய அரசாங்க அதிகாரி ஒருவர், சிஎன்என்-நியூஸ்18 தொலைக்காட்சிக்கு கூறியிருந்தார்.

இதுகுறித்து, மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பிய போது,

“இந்த சதித் திட்டம் பற்றி முன்கூட்டியே தகவல்களை அளித்து இந்தியா உதவியிருக்கிறது.

ஆனால், தேசிய காவல் படை இங்கு வரத் தேவையில்லை.  எமக்கு வெளிநாட்டுப் படையினர் உதவி தேவைப்படவில்லை.

இதனைக் கையாளும் திறன் எமது படையினருக்கு உள்ளது. அவர்களுக்கு தேவையான அதிகாரத்தையும், சுதந்திரத்தையுமே கொடுக்க வேண்டியிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. புலிகளை அடக்கியது எமது படைகள்.ஆனால் புலிகளுடன் போரிட்டு முக்குடைபட்டு அவமானத்துடன் ஓடிய அவர்கள்.எமது Sri Lanka படைகளுக்கு உள்ளது மிகப் பெரிய பலம்.

    ReplyDelete
  2. SRI LANKAN Army is one of the best armies to tackle terrorism. It has indeed did it in the past. This is not a big issue for SL. So we do not need your help this time. Thank you for your offer.

    ReplyDelete
  3. Indian Army could not defeat LTTE, But it was defeated by SriLankan Army.

    ReplyDelete
  4. 22 Million Sri Lankans knows about geopolitics now, We do not make Sri Lankan another battle filed between US+ CHINA+INDIA. Please leave us live in peace. We are a small nation of 22 millions. We do not like to contribute at all for geopolitics of these big brothers. We are not North Koreans. We do not have any weapons of mass destruction and we not produce any atomic bombs. We are peace loving peace of 22 millions with 4 beautiful religions. Let Sri Lankan armies, Intelligence and politicians deal with it. Please do not put your politics into our land. We love peace and we love others live with peace. No more war need.

    ReplyDelete

Powered by Blogger.