Header Ads



குண்டுத் தாக்குதல்கள் என்னை, கடுமையாக வேதனையடைச் செய்துள்ளன - கோத்தா

இன்றைய தினம் -21- தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த குண்டுத் தாக்குதல்கள் கடுமையான வேதனை அளிப்பதாக கோத்தபாய டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த வேதனையான தருணத்தில் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றிணைந்து நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த அனைவரினதும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என கோத்தபாய ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.