ஜனாதிபதி பதவிக்கு, மீண்டும் மைத்திரி போட்டியிடுவார் - வெற்றியும் ஈட்டுவார் - ஆசாத் சாலி
தோல்விப் பயத்தில் உள்ள, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது தலைமைப் பதவியை தக்க வைப்பதற்காக ஐ.தே.க. க்கு வெளியே ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவாரென மேல் மாகாண ஆளுநர்ஆசாத் சாலி குறிப்பிட்டார்.
அவர் இதுபற்றி மேலும் தெரிவித்தாவது,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார். அவர் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்படுவார்.
பிரதமர் ரணில் நம்பிக் கொண்டிருப்பது போன்று, அவருக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கப் போவதில்லை.
எனவே ரணில் தனது தலைமையை காப்பாற்றுவதற்காக ஐ.தே.க. க்கு வெளியே ஒரு ரேட்பாளரை தேடிப்பிடித்து நிறுத்துவார். ரணில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால், நிச்சயம் தோல்வியைத் தழுவுவார். தோல்வியைத் தழுவனால் கட்டித் தலைமைப் பதவி அவரிடமிருந்து பிடுங்கப்படும்.
தான் சாகும் வரைக்கும், கட்சிக்கு தானே தலைமை தாங்க வேண்டுமென அவர் நினைக்கிறார். அதற்கான காரியங்கிளிலேயே ரணில் ஈடுபட்டுள்ளார் எனவும் ஆசாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment