அம்பாறை வைத்தியசாலையில், சிகிச்சைபெறும் சஹ்ரானின் மனைவி
சவளக்கடையில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு தொடர்பாக ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸ் கொன்ஸ்டபிளுக்கு முஸ்லிம்கள் தகவல் வழங்கியுள்ளனர். இந்த தகவலே குறித்த பயங்கரவாதக் குழுவைப் பற்றி மிக முக்கியமான தகவலை அதிகாரிகள் பெற்றுக்கொள்வதற்கு எதுவாக அமைந்தாக பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தில் இராணுவ பேச்சாளரும் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் சுமித் அதபத்து தலைமையில் நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டின்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் ருவன் குணசேகர,
அப்துல் காதர் பாத்திமா சாதியா அல்லது சித்தியா எனும் பெயரில் தேடப்பட்டு வந்த பெண் தற்போது அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவரென்றும் அவர் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவியென்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Post a Comment