Header Ads



ஒரு சமூகத்தை, குற்றவாளியாக்குவது ஆபத்தானது

குறிப்பிட்டவொரு சமூகத்தைக் குற்றவாளியாக்கி நகர்வோமெனில் இந் நாட்டில் மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்திற்கான வாய்ப்பு மீண்டுமொரு முறை குழிதோண்டிப் புதைக்கப்படும் என தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.

நாம் இச் சூழலைப் பொறுப்பாகக் கையாளாதவிடத்து மிக மோசமான காலகட்டத்தை நோக்கி நகர வேண்டியேற்படும் என்ற புரிதலுடன் குறுகிய மனப்பான்மையுடன் செயற்படாது தூரநோக்குடன் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் இந்த நெருக்கடிக்கான பதிலை தேசிய பாதுகாப்பு என்ற எல்லைக்குள் தேடுவோமாயின், அதனால் இந்நாட்டின் சிறுபான்மையின சமூகங்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் எமது அனுபவத்திலிருந்து ஞாபகப்படுத்த விரும்புகின்றோம் என்று கூறியுள்ளது.

1 comment:

Powered by Blogger.