Header Ads



பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வரு­ப­வர்கள், கூடிநின்று கதைப்­ப­தற்கும் தடை


பள்­ளி­வா­சல்­களை தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து பாது­காப்­ப­தற்கு பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் பாது­காப்பு பிரி­வி­ன­ருடன் இணைந்து செயற்­பட வேண்­டு­மெ­னவும், பார்­சல்கள் பள்­ளி­வா­ச­லுக்குள் கொண்டு வரப்­ப­டு­வது தடை செய்­யப்­பட வேண்­டு­மெ­னவும் கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் நாட்­டி­லுள்ள அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளி­டமும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. இவ்­வேண்­டு­கோளை கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் விடுத்­துள்ளார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை குறிப்­பிட்ட பள்­ளி­வா­சல்கள் தீவி­ர­வா­தி­களால் தாக்குவதற்கு திட்­ட­மி­டப்­பட்­டி­ருப்­ப­தாக அரச உளவு பிரி­வினர் எச்­ச­ரிக்கை விடுத்­த­தை­ய­டுத்து பள்­ளி­வா­ச­லுக்கு ஜும்ஆ தொழு­வ­தற்கு வருகை தந்­த­வர்கள் ஒவ்­வொ­ரு­வ­ராக பரி­சோ­திக்­கப்­பட்டே பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் அனு­ம­திக்­கப்­பட்­டனர். வெள்­ளிக்­கி­ழமை பள்­ளி­வா­சல்­களில் மேற்­கொண்ட பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஜய­சிங்க பாராட்டுத் தெரி­வித்­துள்ளார். நாட்டின் நிலைமை சீரா­காதுவிடின் தொடர்ந்து எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழ­மையும் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களைத் தொட­ர­வுள்ளோம். வெள்­ளிக்­கி­ழமை பள்­ளி­வா­சல்­களில் இவ்­வா­றான பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்ட தொண்­டர்கள் ஜும்ஆ தொழு­கையை தொழாது ஜும்ஆ தொழுகை நடந்து முடிந்­த­வுடன் ளுஹர் தொழு­கை­யையே தொழு­தனர்.

பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வரு­ப­வர்கள் குழுக்­க­ளாக கூடி நின்று பள்­ளி­வாசல் வளா­கத்தில் கதைத்துக் கொண்­டி­ருப்­ப­தற்கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு ஒவ்வோர் தொழுகையின் பின்பும் பள்ளிவாசல்கள் பூட்டப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளோம். இந்த ஏற்பாடு பல பள்ளிவாசல்களில் நடைமுறைப்படுத் தப்பட்டு வருகிறது. பாதுகாப்புக்கு இது நல்லவோர் திட்டமாகும் என்றார்.

No comments

Powered by Blogger.