Header Ads



தாக்குதல் சம்பவத்தின் சக்திகள், எமது தாய் நாட்டிலிருந்து முற்றாக கலைந்தெரியப்பட வேண்டும் - கரு ஜயசூரிய

தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் மோசமான சக்திகள் எமது தாய் நாட்டில் இருந்து முற்றாக கலைந்தெரியப்பட வேண்டும். அதற்காக அனைவரும் இலங்கையர்களாக ஐக்கியமாக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பின்வாங்கக்கூடாது என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.

அத்துடன் இது ஒரு இனத்துக்கோ மதத்துக்கோ எதிரானதல்ல. மாறாக எமது தாய் நாட்டுக்கும் அனைத்து மக்களதும் நல்லிணக்கத்துக்கும் சகவாழ்வுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதனை குறுதிய இனவாத, இனவாத கோணத்தில் பார்க்காமல் நிதானமான சிந்தனையுடன் முகம்கொடுத்து சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும்  பாதுகாத்து மக்களுக்கு மரியாதை செலுத்துவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட அமர்வாக பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகரின் அறிவிப்பின்போதே  இவ்வாறு குறுப்பிட்டார்.

No comments

Powered by Blogger.