Header Ads



நீரில் விஷம் கலந்துள்ளதாக, வதந்திகளை பரப்பிய இருவர் கைது

நீரில் விஷம் கலந்துள்ளதாக நேற்றைய தினம் வதந்திகளை பரப்பிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு 15 – மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த குறித்த சந்தேக நபர்களை புளுமெண்டல் காவல்துறை நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.