Header Ads



அடிப்­ப­டை­வாத அரசியல், அச்சுறுத்தல்களுக்கு நான் அடிபணியப்போவதில்லை - சம்­பிக்க

புத்­தளம் அறு­வாக்­காடு பகு­தியில் நிறு­வப்­படும் கொழும்பு திண்­மக்­க­ழிவு முகா­மைத்­துவ திட்­டத்­துக்கு தெரி­விக்­கப்­படும் எதிர்ப்பின் பின்­ன­ணியில் அர­சி­யலே இருக்­கி­றது. தங்கள் அர­சியல் சுய­நலம் கரு­திய அர­சி­யல்­வா­திகள் இதன் பின்­ன­ணியில் இருக்­கி­றார்கள். அர­சியல் ரீதி­யான எதிர்ப்­புப்­போ­ராட்­டங்­க­ளுக்கு நான் அடி­ப­ணியப் போவ­தில்லை. அறு­வாக்­காடு குப்பைத் திட்டம் தொடர்­பாக ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் ஆராய்ந்து இறு­தித்­தீர்­மா­னத்தை மேற்­கொள்­ள­வேண்டும் என மாந­கரம் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார்.

அறு­வாக்­காடு குப்பைத் திட்டம் தொடர்பில் சிங்­கள ஊட­க­மொன்­றுக்கு வழங்­கி­யுள்ள நேர்­கா­ண­லி­லேயே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரி­வித்­துள்­ள­தா­வது;

தற்­போது அறு­வாக்­காடு குப்பை முகா­மைத்­துவத் திட்டம் நிர்­மா­ணிக்­கப்­பட்டு விட்­டது. மார்ச் 16 ஆம் திக­தி­யி­லி­ருந்து எவ­ருக்கும் குப்­பை­களை இங்கு கையளிக்க முடியும். குப்பைப் பிரச்­சினை எனதோ புத்­த­ளத்து மக்­க­ளி­னதோ அமைச்சர் ரிசாத் பதி­யு­தீ­னி­னதோ பிரச்­சினை அல்ல. இதுவோர் தேசிய பிரச்­சி­னை­யாகும். சூழ­லுக்கு பாதிப்­பற்ற வகை­யி­லேயே இங்கு குப்பை முகா­மைத்­துவம் செய்­யப்­ப­ட­வுள்­ளது. அந்த வகை­யி­லேயே இந்தத் திட்டம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை உறு­தி­யாகக் கூறு­கிறேன்.

கொழும்பு மாந­க­ர­சபை உட்­பட ஏனைய உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்கள் தங்­க­ளது குப்­பை­க­ளுக்கு என்ன செய்­வது என்­பதை அவர்கள் தீர்­மா­னிக்க வேண்டும். ஏனை­ய­வர்­களின் குப்­பை­களைச் சுமப்­ப­தற்கு நாங்கள் தயா­ராக இல்லை. அவர்கள் குப்பை முகா­மைத்­துவம் செய்­யாது உறங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். அத்­தோடு அறு­வாக்­காடு குப்பைத் திட்­டத்­துக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு மறை­மு­க­மாக உத­விக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். கொழும்பில் நடை­பெற்ற எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு மாளி­கா­வத்­தை­யி­லுள்ள மக்கள் அழைத்­து­வ­ரப்­பட்டு ஈடு­ப­டுத்­தப்­பட்­டார்கள்.

சூழ­லி­ய­லா­ளர்­களின் ஆய்­வுக்­குப்­பின்பே குப்பை முகா­மைத்­துவத் திட்­டத்­துக்கு நாம் அறு­வாக்­காட்டை தேர்ந்­தெ­டுத்தோம். நாட்­டி­லுள்ள உயர்­நி­லை­யி­லுள்ள 16 சூழ­லி­ய­லா­ளர்­களே இந்த இடத்தைத் தெரிவு செய்­தார்கள். நாம் இரு ஆய்­வு­களை நடத்­தினோம். 17 விழிப்­பு­ணர்வு நிகழ்­வு­களை நடத்­தினோம். குப்பை முகா­மைத்­துவத் திட்டம் புத்­த­ளத்தில் இருப்­ப­தாக கிளீன் புத்­தளம் அமைப்பு தெரி­வித்­தாலும் புத்­த­ளத்­தி­லுள்ள 13 பிர­தேச சபை­களின் கீழ் குப்பை முகா­மைத்­து­வத்­திட்டம் இல்லை.

கொழும்பு பகு­தி­யி­லி­ருந்து குப்­பை­களை எடுத்­துச்­செல்­வ­தற்கு எதிர்­வரும் டிசம்பர் மாதத்­தி­லி­ருந்து புகை­யி­ர­தமும் தயார் நிலையில் இருக்கும். இதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதா இல்­லையா? என்­பதை ஜனா­தி­பதி, பிர­தமர் ஆராய்ந்து தீர்­மா­னிக்க வேண்டும். நான் எனது கட­மையைச் செய்து விட்டேன். அடிப்­ப­டை­வாத அரசியல் அச்சுறுத்தல்களுக்கு நான் அடிபணியப்போவதில்லை. எதிர்கால பரம்பரை மீது அக்கறையற்ற சுயநலவாத அரசியல்வாதிகள் தாம் விரும்பியவாறு செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது.

இன்று எவருக்கும் குப்பைகளை கையளிக்கக்கூடிய இடமொன்று நிர்மாணிக்கப் பட்டுள்ளமை குறித்து நாட்டு மக்கள் பெருமைப்படவேண்டும் என்றார்.

2 comments:

  1. What is that fundamentalist politics? If Champika explain such politics it is much good for to go ahead with other politics.

    ReplyDelete
  2. This devil Champika is a sworn enemy of a minority community in Sri Lanka, fed and fattened by the demons from overseas always spreading lies and fabrications with the support from certain sectors of the evil media, may hell descend upon this monster.

    ReplyDelete

Powered by Blogger.