என் அன்பின், கிருஸ்தவ நண்பர்களுக்கு
எதுவும் செய்ய முடியாமல்
மூலையில் முங்கிப்போய்
கிடக்கிறேன்...
உன் முகநூல் பதிவுகளுக்கு மட்டும்
கண்ணீர் அடையாளமிட்டு
வருத்தம் தெரிவிக்கிறேன்....
எவனோ செய்த துரோகத்துக்கு
தினமும் நான்
தூக்கில் தொங்குகிறேன்...
தூங்கி எழும்பும்
ஒவ்வொரு விடியலிலும்
ஏதோ ஒன்றை இழந்துவிட்டதாக
ஏங்குகிறேன்...
அப்பாவி மக்கள்/ குழந்தைகள்..
நினைக்கும் போதெல்லாம்
கண்களில் வெள்ளம்.
துப்புக்கெட்ட தீவிரவாத
துரோகிகளை
துடிதுடிக்க
கொன்று சாய்க்க
துடிக்கிறது உள்ளம்...
மன்னித்துவிடு நண்பா...
முகம்பார்த்து பேச
முடியவில்லை..
முகம்மூடிய
தீவிரவாத நாய்களை
ஒட்டுமொத்தமாக புதைத்து
மூடும்வரை
எங்களுக்கு விடிவில்லை....
எம். றிஸ்வான்..
Superb My heart full thanks brother I also join with you
ReplyDeleteThanks I also join with you
ReplyDelete