ரணிலுக்கு வழங்கப்படும் சகல, உணவுகளும் பாதுகாப்புத் தரப்பின் பரிசீலனைக்கு - நடந்தது என்ன...?
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் அனைத்தும் பாதுகாப்பு தரப்பின் பரிசீலனைக்குப் பின்னரே இனி வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது
சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் அருந்துவதற்காக கொண்டுவரப்பட்ட சோடா போத்தல் ஒன்றில் துணித்துண்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸ் அதனை மேலதிக ஆய்வுகளுக்காக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பியுள்ளது.அத்துடன் வெலிக்கடை பொலிஸ் இதுபற்றி நுகேகொட நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளது.இந்த துணித்துண்டு ஒரு அங்குலத்திற்கும் நீளமான கறுப்பு நிறம் கொண்டதாக இருந்துள்ளது
பிரதமருக்கு வழங்கப்படவிருந்த சோடா போத்தலில் இருந்த இந்த துணித்துண்டை கண்ட பாராளுமன்ற பொலிஸ் ஊழியர் ஒருவர் இதுபற்றி படைக்கல சேவிதருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து அதுபற்றி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது.
இதன் பின்னணியில் சதி முயற்சிகள் ஏதும் உள்ளனவா என்பது பற்றியும் ஆராயப்படுகிறது.
TN
Post a Comment