Header Ads



சஹ்ரானின் மனைவியும், குழந்தையும் காயமடைந்துள்ளார்களா...?

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயமடைந்துள்ள ஒரு பெண் மற்றும் குழந்தை தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் மனைவியும் குழந்தையுமென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதல் சம்பவங்களின் சூத்திரதாரி என்று சொல்லப்படும் ஸஹ்ரான் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு உயிரிழந்தாரென இராணுவம் தெரிவித்துள்ள சூழ்நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

காத்தான்குடியில் இருந்து இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்ட சஹ்ரானின் சகோதரி ஹாஷிம் மதனியா ,சஹ்ரானின் மனைவியும் மகளும் காயமடைந்திருப்பதை உறுதிப்படுத்தினார்.

அவர்களை அடையாளம் காட்ட வருமாறு தம்மிடம் கோரப்பட்டதாகவும், ஆனால் தம்மால்போகக் கூடிய சாத்தியம் இருக்குமோ தெரியவில்லை என அவர் சந்தேகம் வெளியிட்டார்.

Tamilan -

No comments

Powered by Blogger.