தேசிய தெளஹீத் ஜமாஅத், அமைப்பின் உறுப்பினர் கைது
தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் பாணந்துறை கிளையின் முன்னாள் உப செயலாளர் இன்று (24) காலை பண்டாரகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபர், வீதி அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான அதிவேக நெடுஞ்சாலை கட்டுபாட்டு பிரிவின், உதவி கட்டுபாட்டாளராக கடமையாற்றிய போதே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உதவி கட்டுபாட்டாளராக கடமையாற்றிய பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இவர் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Post a Comment