தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள், தங்கியிருந்த வீடு பாணந்துறையில் சுற்றி வளைப்பு
இலங்கை நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் வீடொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
பாணந்துறை பகுதியில் இன்று மாலை இந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டதாகவும், குறித்த பகுதியில் தற்போது சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
இலங்கையில் இன்று இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இந்த சந்தேகநபர்கள் அனைவரும் கொழும்பு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 10 பேரை குற்றப் புலனாய்வு பிரிவினர் தமது பொறுப்பிற்கு எடுத்து விசாரணைகளை நடத்தி வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியது. bbc
Post a Comment